

எல்லையில்லா கருணை வடிவானவள் என் அன்னை, எனக்கு துன்பம் நேரும் போதெல்லாம் ஓடி வந்து என் துன்பத்தை போக்குபவள், லலிதா நவரத்தின மாலையில் சொன்னதுபோல் "நாணித்திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடதவள்" , நம்பியவருக்கோ நினைத்ததை நினைத்தவண்ணம் நடத்தி தருபவள். அகத்திய முனிவருக்கு நவரத்தினமாய் காட்சி தந்தவள்.
இவ்வளவு பெருமைகள் உடைய திருமீயச்சூர் திருத்தல வரலாற்றை காண்போம் :
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் உள்ளது.
இறைவன்: அருணேஸ்வரர் இறைவி: லலிதாம்பிகை, சாந்தநாயகி தீர்த்தம் : சூர்ய தீர்த்தம் தற்போதைய பெயர் : மீயச்சூர்
காசிப முனிவரின் மகனான அருணனை வஞ்சித்த சூரியன் ,தனது சாபம் தீருவதற்காக மீயச்சூர் வந்து இறைவனை வழிபட்டான். வெகுகாலம் ஆகியும் தனது சாபம் தீராததால் வருத்தத்துடன் " ஹே மிகுரா" என கதறிய போது ஏகாங்தத்தில் இருந்த தேவி கோபமுற , இறைவன் சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த அன்னை பராசக்தியின் வாயிலிருந்து வசினி என்ற வாக்தேவதைகள் தோன்றி திருவாய் மலர்ந்தருளியதே லலிதா சகஸ்ரநாமம் ஆகும்.
அப்பர் தேவாரம் :
திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை
| 105 | தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் |
தல வரலாறு
-
இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய "லலிதா சகஸ்ரநாமம்" என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று.
சிறப்புக்கள்
- இத் தல அம்பிகை மிகச் சிறப்பு.
-
சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, மயிலாடுதுறை-பேரளம் இரயில்பாதையில், பேரளம் நிலையத்திற்கு மேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் பேரளத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
ayya naanum thiruvarur thaan
ReplyDeletemudinjaa en pakkamum vaanga